சோம்பேறிக் கண் பார்க்க சாதாரணமாக இருந்தாலும் அதன் பார்வைத் திறன் குறைவாக இருக்கும். இரண்டு கண்களில் ஒரு கண் பலவீனமாக இருக்கும் அதை சோம்பேறிக் கண் எனக்  கூறிவோம். குழந்தைகளுக்கு மட்டுமே இந்த நிலை ஏற்படும்.


காரணங்கள்:

பார்வையைத்  தெரிவதற்கு மூளையும் கண்களும் சேர்ந்து இயங்க வேண்டும். மூளையும் ஒரு கண்ணும் சேர்ந்து வேலை செய்யாத போது தெளிவற்ற பார்வை உண்டாகிறது. நாளடைவில் பார்வை மங்கலாகத் தெரியும். சோம்பேறிக் கண்ணிற்கும் மூளைக்குமான தொடர்பு மிகவும் முறையாக / சரியாக இருக்காது. இந்த கண்ணால் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் மிகக் குறைவான தரத்தில் தெளிவில்லாமல் இருக்கும். கண்ணை மூளை முறையாக தொடர்பு இல்லாததால் சோம்பேறிக்  கண்  மேலும்    மோசமடையும்.
    

1. மாறுகண் 
2. பார்வைத் திறனில் வித்தியாசம்  ஏற்படுதல்.
3. இமை இறக்கம்.
4. கண் புரை.
5. பிறக்கும் போது கண்ணின் அளவு சிறியதாக இருத்தல்.
6. குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள்.
7. வளர்ச்சியில் தேக்கம் இருத்தல் (Prematurity).


அறிகுறிகள்:
   

➰இரு கண்களும் இணைந்து செயல்படாது 
➰ஒரு கண்,உள்நோக்கியோ வெளிநோக்கியோ இருக்கும்.
➰கண் அசைவுகள், இயல்பற்று இருத்தல்.
➰கவனமாகப் பார்க்க, ஒரு கண்ணை மூடி, மற்றொரு கண்ணால் பார்க்க வேண்டிய நிலை.
➰தலையை சாய்த்தபடி பார்த்தல்.


சிகிச்சை :

உங்கள் பிள்ளைக்கான சிறந்த சிகிச்சை பற்றி உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்கமளிப்பார்.  சிகிச்சையானது உங்கள் பிள்ளையின் வயது மற்றும் சோம்பேறி கண் நோய்க்கான காரணம் என்பனவற்றைப்  பொறுத்ததாக  இருக்கும்.

மூக்குக் கண்ணாடி:


உங்கள் பிள்ளையின் கண் பார்வையை முன்னேற்றுவிக்க கண்ணாடி தேவைப்படலாம். இரு கண்களும் ஒன்றாக வேலை செய்வதற்கும் இரு கண்களையும் ஒரே பிம்பத்தில் குவியச் செய்வதற்கும் மூக்குக் கண்ணாடி உதவி செய்யும் மூக்குக் கண்ணாடி உதவி செய்வதற்கு உங்கள் பிள்ளை எப்போதும்அதைஅணிந்திருக்க வேண்டும்.

இயல்பான கண்ணை மறைக்கும் சிகிச்சை (Occlusion Therapy):

    

இந்த சிகிச்சையில் பார்வையுள்ள கண்ணை அடைத்து அல்லது மூடி வைத்து பார்வை குறைந்த கண்ணுக்கு வேலை கொடுக்கப்படும்.  இரண்டு கண்களிலும் சமமான பார்வையை ஏற்படுத்தவும் கண்களின் அசைவுகளை மேம்படுத்தவும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. 

   அதிக பார்வையுள்ள கண்ணுக்கு ஒட்டுப் போட்டு மறைத்து விடுவது சோம்பற் கண்ணைப் பலப்படுத்த உதவி செய்யும். எவ்வளவு அடிக்கடி மற்றும் எவ்வளவு காலத்துக்கு ஒட்டுப்போடுதல் தேவைப்படும் என்பது பற்றி உங்கள் மருத்துவர் உங்களுக்கு விளக்கமளிப்பார். கொடுக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கிறதா என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்காக மருத்துவர் அடிக்கடி உங்கள் பிள்ளையைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டிருக்கலாம்.

கண் சொட்டு மருந்து:



சில சமயங்களில் வலிமையான கண்ணிலிலுள்ள பார்வையை மங்கச் செய்வதற்காக மருத்துவர் விசேஷ கண் சொட்டு மருந்தை எழுதிக் கொடுக்கலாம். இது சோம்பற் கண்ணை மேலும் அதிகமாக வேலை செய்யத் தூண்டும்.

கண் பயிற்சி 

சினாப்டோபோர் : 



 மாறுகண் உள்ள குழந்தைகளுக்கு இந்த கருவி கண் தசை சமநிலை மாற்றம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கண்டு பிடிக்க உதவும். கண் நரம்பு பலவீனமாக இருந்தால் (Loss of Binocular Vision) இந்த கருவியின் உதவியுடன் அதை சரிபடுத்தலாம்.

(VIRTUAL REALITY)மெய்நிகர் உண்மையிலிருந்து கிடைக்கும் பார்வை பலன்கள்:



   கண் பராமரிப்பு நிபுணரின் வழிகாட்டுதலின் கீழ், கண் ஒருங்கிணைப்பு, கை-கண் ஒருங்கிணைப்பு, ஆழமான உணர்தல் மற்றும் எதிர்வினை நேரத்தை மேம்படுத்த வி ஆர்  (VIRTUAL REALITY) ஹெட்செட் பயன்படுத்தப்படலாம்.கூடுதலாக, வி ஆர் (VIRTUAL REALITY) ஹெட்செட்டை முறையாகப் பயன்படுத்தினால், சோம்பேறிக் கண் (ஆம்பிலியோபியா) உள்ள ஒருவருக்கு சிறந்த பார்வைக் கூர்மையை உருவாக்க முடியும்.


அறுவை கிகிச்சை :

மாறு கண். 
கண்ணில் படலம்.
இமை இறக்கம்.
கண்களில் வேறு நோய்கள்.

 அறுவைச் சிகிச்சை அவசியமானால், செயல் முறைகள் பற்றி உங்கள் மருத்துவர் உங்களிடம் கூறுவார். உங்களுக்கு கேள்விகள் அல்லது கவலைகளிருந்தால் உங்கள் பிள்ளையை பார்வையிட்ட  மருத்துவரை  அணுகுங்கள்.







Comments
Comments
{{c.name}} ({{c.dat}})

{{c.comment}}

{{r.name}} ({{r.dat}})

{{r.reply}}

Post Your Comment
About Author
...
Dr. Suresh J Paul MBBS, DO

Dr, Suresh Eye Hospital has a Community Outreach Programme which takes eye care services to the community.

Featured Post

2020 © All Rights Reserved | Designed and Developed by Smarteyeapps